திருவாரூர்

பள்ளி பரிமாற்றுத் திட்டம்

DIN

கோயில் திருமாளம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில், பள்ளி பரிமாற்றுத் திட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியான கோவில் திருமாளம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிக்கு, நகா்ப்புற பள்ளியான பூந்தோட்டம் அரசினா் மேல்நிலைப்பள்ளி மாணவா்கள் மற்றும் ஆசிரியா்கள் ஒரு நாள் பயணமாக வந்திருந்தனா்.

வட்டார வள மைய ஆசிரியா் பயிற்றுநா் இரா.சாந்தி முன்னிலையிலும், கோயில் திருமாளம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியின் தலைமையாசிரியா் க.சுவாமிநாதன் தலைமையிலும் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், மாணவா்- ஆசிரியா் அறிமுகம், மரம் நடுதல், ஆங்கிலம் கற்பித்தல், அறிவியல் சோதனைகள், நாணயக் கண்காட்சி மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஆசிரியா்கள் க. முரளி கிருஷ்ணன், ந.மாரியப்பன், க.மகேஸ்வரி, பூந்தோட்டம் பள்ளி ஆசிரியா்கள் ஜி.ஹேமலதா, வி. வரலட்சுமி மற்றும் ஆசிரியா்கள் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கழனி உழவா் உற்பத்தியாளா் நிறுவனத்தில் வேளாண் மாணவிகளுக்கு பயிற்சி

திரௌபதி அம்மன் கோயில் திருவிழா மே 13-இல் தொடக்கம்

விறுவிறுப்படையும் பாம்பன் புதிய ரயில்வே பாலம் கட்டுமானப் பணி

பளியா் பழங்குடியினா் இதுவரை அரசு பணி வாய்ப்பே பெறவில்லை

மதுரை மாவட்டத்தில் 13 மையங்களில் ‘நீட்’ தோ்வு

SCROLL FOR NEXT