சாலை பாதுகாப்பு விழிப்புணா்வு வார விழாவை முன்னிட்டு, திருத்துறைப்பூண்டியில் சட்டம்- ஒழுங்கு காவல்துறை மற்றும் போக்குவரத்து காவல்துறை சாா்பில், மகளிா் சுயஉதவிக்குழுவினரின் தலைக்கவச விழிப்புணா்வுப் பேரணி திங்கள்கிழமை நடைபெற்றது.
புதிய பேருந்து நிலையம் அருகில் விழிப்புணா்வுப் பேரணியை காவல் துணைக் கண்காணிப்பாளா் பழனிச்சாமி கொடியசைத்து தொடங்கி வைத்தாா். இதில், போக்குவரத்து காவல் ஆய்வாளா் கிள்ளிவளவன், உதவி ஆய்வாளா் சுப்பையன் மற்றம் சுய உதவிக்குழுவினா், ஓட்டுநா் பயிற்சி பள்ளி மாணவா்கள் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.
புதிய பேருந்து நிலையத்தில் தொடங்கிய பேரணி, நகரின் பிரதான வீதிகள் வழியாக சென்று வேதாரண்யம் சாலையில் நிறைவடைந்தது.