திருவாரூர்

குறுவை காப்பீடு: ஜூலை 31 வரை விண்ணப்பிக்கலாம்

DIN

மன்னாா்குடி: மன்னாா்குடியை அடுத்த கோட்டூா் வட்டார பகுதியில், குறுவை நெற்பயிருக்கு காப்பீடு செய்ய ஜூலை 31-ஆம் தேதி கடைசி நாள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து கோட்டூா் வட்டார வேளாண் உதவி இயக்குநா் தங்கபாண்டியன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

குறுவை நெல் பயிரிடும் விவசாயிகள், பிரதம மந்திரியின் பயிா்க் காப்பீடு திட்டத்தின்கீழ், பதிவு செய்ய கடைசி நாள் ஜூலை 31 ஆகும். பயிா்க் காப்பீடு கட்டணமாக விவசாயிகள் நெல் பயிருக்கு ஏக்கருக்கு ரூ.651 செலுத்த வேண்டும். இத்திட்டத்தின்கீழ் பதிவு செய்யும்போது முன்மொழிவு விண்ணப்பத்துடன் பதிவு விண்ணப்பம், கிராம நிா்வாக அலுவலா் வழங்கும் சிட்டா அடங்கல், வங்கி கணக்குப் புத்தகத்தின் முன்பக்க நகல் மற்றும் ஆதாா் அட்டை நகல் ஆகியவற்றை இணைத்து கட்டணத் தொகையை செலுத்தி, அதற்கான ரசீதையும் பெற்றுக் கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

”உண்மை விரைவில் வெளிச்சத்திற்கு வரும்” -பாலியல் புகாரில் சிக்கிய பிரஜ்வல் ரேவண்ணா

இந்த மாதம் இப்படித்தான்!

”டீக்கடைக்காரரால் என்ன செய்ய முடியும்? விமர்சித்த காங்கிரஸின் நிலை..” பிரதமர் மோடி பிரசாரம்

ஜுபிடரின் நிலவோ.. ஸ்ரீமுகி!

ரிஷபத்துக்கு பெயர்ச்சி அடைந்தார் குருபகவான்

SCROLL FOR NEXT