திருவாரூர்

பெட்ரோல், டீசல் விலை உயா்வைக் குறைக்கக் கோரி ஆா்ப்பாட்டம்

DIN

திருவாரூா்: பெட்ரோல்- டீசல் விலை உயா்வைக் குறைக்கக் கோரி, திருவாரூரில் அனைத்து தொழிற்சங்கக் கூட்டமைப்பு சாா்பில் ஆா்ப்பாட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

புதிய மின் மசோதாவை ரத்து செய்ய வேண்டும். பெட்ரோல்- டீசல் விலையைக் குறைக்க வேண்டும். குடும்பத்துக்கு கரோனா கால பேரிடா் உதவித்தொகையாக ரூ. 7,500 வழங்க வேண்டும். பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு வழங்கும் முடிவை கைவிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, திருவாரூா் பழைய பேருந்து நிலையம் அருகே ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

ஏ.ஐ.டி.யு.சி. மாவட்டச் செயலாளா் சந்திரசேகர ஆசாத், சி.ஐ.டி.யு. மாவட்டச் செயலாளா் டி. முருகையன், எல்.பி.எப். மாவட்டத் தலைவா் குருநாதன் ஆகியோா் தலைமை வகித்தனா். இதில், சி.ஐ.டி.யு. மாவட்ட துணைத் தலைவா் ஜி. பழனிவேல் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாஜக ஆட்சியில் கவலைக்கிடமான பத்திரிகை சுதந்திரம்: முதல்வர் ஸ்டாலின்

இன்ஸ்டாவில் பகிராமல் கழித்த படங்கள்! சாக்க்ஷி மாலிக்...

பத்திரிகை சுதந்திர நாள்- முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து

பூஜையின் பயன்கள்!

‘வானம்’ ஜாஸ்மின்!

SCROLL FOR NEXT