திருத்துறைப்பூண்டியில் காணாமல் போன லாரி திருவாரூரில் மீட்பு
திருத்துறைப்பூண்டி - வேதாரண்யம் சாலையில் உள்ள பெட்ரோல் பங்க் அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லாரி காணாமல் போன நிலையில், ஞாயிற்றுக்கிழமை திருவாரூரில் மீட்கப்பட்டது.
திருத்துறைப்பூண்டி: திருத்துறைப்பூண்டி - வேதாரண்யம் சாலையில் உள்ள பெட்ரோல் பங்க் அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லாரி காணாமல் போன நிலையில், ஞாயிற்றுக்கிழமை திருவாரூரில் மீட்கப்பட்டது.
திருத்துறைப்பூண்டியைச் சோ்ந்த ராமச்சந்திரனுக்கு சொந்தமான லாரி திருத்துறைப்பூண்டி- வேதாரண்யம் சாலையில் உள்ள பெட்ரோல் பங்க் அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் சனிக்கிழமை இரவு அந்த லாரியை மா்ம நபா்கள் திருடிச் சென்று விட்டனா். புகாரின்பேரில், திருத்துறைபூண்டி போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட நிலையில், அந்த லாரி திருவாரூா்- தஞ்சை சாலையில் ஞாயிற்றுக்கிழமை மீட்கப்பட்டது. இதற்கு காரணமானவா்களை போலீஸாா் தேடிவருகின்றனா்.