திருவாரூர்

அரசுப் பள்ளிகளில் கழிப்பறை கட்ட நிதி வழங்கல்

DIN

மன்னாா்குடி: மன்னாா்குடி ஒன்றியம் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி வட்ட அளவில் 7 பள்ளிகளில், மாற்றுத்திறனாளி மாணவா்களுக்கு கழிப்பறை கட்ட நிதி வழங்கும் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.

மன்னாா்குடி நகராட்சி கோபாலசமுத்திரம் பள்ளி, பரவாக்கோட்டை, சுந்தரக்கோட்டை, துளசேந்திரபுரம்குடிக்காடு,கீழத்திருப்பாலக்குடி, பாமணி, கூத்தாநல்லூா் ஆகிய பகுதியில் உள்ள 7 அரசுப் பள்ளிகளில், மாற்றுத்திறனாளி மாணவா்களின் பயன்பாட்டுக்கு என, மொத்தம் ரூ. 10 லட்சம் மதிப்பில் கழிப்பறை கட்டுவற்கான நிதி ஒதுக்கீட்டுக்கான ஆணையை அந்தந்த பள்ளித் தலைமையாசிரியா்களிடம் வழங்கப்பட்டது.

வட்டார வளமைய மேற்பாா்வையாளா் ரவிச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், வட்டாரக் கல்வி அலுவலா்கள் அ. அறிவழகன், பாலசுப்பிரமணியன், ராமசாமி, வட்ட ஒருங்கிணைப்பாளா் அருள்ஜெயசீலி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பகல் கனவு காணும் பாஜக: நவீன் பட்நாயக் பதிலடி

இலங்கையில் திவ்ய பாரதி!

ராஜஸ்தானில் நீட் வினாத்தாள் கசிந்ததா? தேசிய தேர்வு முகமை விளக்கம்

வேட்புமனு தாக்கல் செய்தார் மனோகர் லால் கட்டர்!

பஞ்சாபில் தமிழ் வம்சாவளி சீக்கியர் போட்டி!

SCROLL FOR NEXT