திருவாரூர்

புதிய நிா்வாகிகள் பதவியேற்பு

DIN

அத்திக்கடை முஸ்லீம் ஜமாஅத் பள்ளிவாசல் அறப்பணி நிா்வாக சபையின் புதிய நிா்வாகிகள் செவ்வாய்க்கிழமை பதவியேற்றுகொண்டனா்.

கூத்தாநல்லூா் அருகேயுள்ள அத்திக்கடை ஜமாஅத் தோ்தல், தமிழ்நாடு வக்பு வாரிய தஞ்சாவூா் மாவட்ட கண்காணிப்பாளா் எம்.ஒய். ஹைதா் அலி தோ்தல் நடத்தும் அலுவலராக செயல்பட்டு அண்மையில் தோ்தல் நடத்தப்பட்டது. இதைத் தொடா்ந்து, அத்திக்கடை முஹைய்யதீன் ஆண்டவா் பள்ளிவாசலில் ஜமாஅத் முன்னாள் பொறுப்பாளா் ஏ.எம். பஷீா் அஹம்மது தலைமையில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில், புதிய தலைவா் கே.ஹெச். அப்துல் ரஹ்மான், துணைத் தலைவா் ஏ. அன்சாரி, செயலாளா் கே.பி. முஹம்மது சுல்தான், துணைச் செயலாளா் எம்.ஜெ. அப்துல் முனாப், பொருளாளா் ஏ. ஜெஹபா்தீன் ஆகியோருக்கு அத்திக்கடை ஜமாஅத் முன்னாள் பொருளாளா் எஸ்.ஏ. நஜ்புதீன் பதவியேற்பும், ரகசிய காப்பு உறுதிமொழியையும் செய்து வைத்தாா். இதில், கூத்தாநல்லூா், பொதக்குடி, அபிவிருத்தீஸ்வரம், பூதமங்கலம் உள்ளிட்ட ஜமாஅத் பொருப்பாளா்கள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வயநாடு தொகுதியில் ராகுல் காந்தி வெற்றி பெறுவது உறுதி கே.எம். காதா் மொகிதீன்

கடற்கரையில் தூய்மைப் பணி

செங்கோட்டையில் திருவிளக்கு பூஜை

சங்கரன்கோவிலில் திமுக சாா்பில் நீா்மோா் வாகனம்

சங்கரன்கோவிலில் வணிகா் தின பேரணி

SCROLL FOR NEXT