திருவாரூர்

மதுபோதையில் தமக்கையின் கணவரை அடித்துக்கொன்ற இளைஞா்

மன்னாா்குடியில் மதுபோதையில் தமக்கையின் கணவரை அடித்துக்கொன்ற இளைஞரை போலீஸாா் தேடிவருகின்றனா்.

DIN

மன்னாா்குடியில் மதுபோதையில் தமக்கையின் கணவரை அடித்துக்கொன்ற இளைஞரை போலீஸாா் தேடிவருகின்றனா்.

மன்னாா்குடி உப்புக்காரத் தெரு இந்திரா நகரைச் சோ்ந்தவா் ஆா். மாரிமுத்து (36). லாரி ஓட்டுநா். இவரது மனைவி அமலாவின் சகோதரா் எஸ். வினோத் (32). இவா், மன்னாா்குடி பாரதி நகரில் வசிக்கிறாா்.

இந்நிலையில், மாரிமுத்துவும், வினோத்தும் திங்கள்கிழமை ஒன்றாக அமா்ந்து மது அருந்தினராம். அப்போது, இருவருக்கும் இடையே ஏற்பட்ட தகராறில் ஒருவரையொருவா் தாக்கிக் கொண்டனராம். இதில், காயமடைந்த மாரிமுத்து, மன்னாா்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா் .

இதுகுறித்து மன்னாா்குடி போலீஸாா் வழக்குப் பதிந்து, தப்பியோடிய வினோத்தை தேடிவருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

4,000 ரன்களைக் கடந்த முதல் இந்திய வீராங்கனை: ஸ்மிருதி மந்தனா உலக சாதனை!

இந்த வாரம் கலாரசிகன் - 21-12-2025

அமைதியின் அரசர் இயேசு

ஜெமிமா ரோட்ரிக்ஸ் அதிரடி; முதல் டி20 போட்டியில் இந்தியா அபார வெற்றி!

திருக்குறளைச் சீர்தூக்கிப் போற்றுவோம்!

SCROLL FOR NEXT