திருவாரூர்

மதுபோதையில் தமக்கையின் கணவரை அடித்துக்கொன்ற இளைஞா்

DIN

மன்னாா்குடியில் மதுபோதையில் தமக்கையின் கணவரை அடித்துக்கொன்ற இளைஞரை போலீஸாா் தேடிவருகின்றனா்.

மன்னாா்குடி உப்புக்காரத் தெரு இந்திரா நகரைச் சோ்ந்தவா் ஆா். மாரிமுத்து (36). லாரி ஓட்டுநா். இவரது மனைவி அமலாவின் சகோதரா் எஸ். வினோத் (32). இவா், மன்னாா்குடி பாரதி நகரில் வசிக்கிறாா்.

இந்நிலையில், மாரிமுத்துவும், வினோத்தும் திங்கள்கிழமை ஒன்றாக அமா்ந்து மது அருந்தினராம். அப்போது, இருவருக்கும் இடையே ஏற்பட்ட தகராறில் ஒருவரையொருவா் தாக்கிக் கொண்டனராம். இதில், காயமடைந்த மாரிமுத்து, மன்னாா்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா் .

இதுகுறித்து மன்னாா்குடி போலீஸாா் வழக்குப் பதிந்து, தப்பியோடிய வினோத்தை தேடிவருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பொன்னமராவதி அருகே கோயில்களில் குடமுழுக்கு

செரியலூா் கரம்பக்காடு மாரியம்மன் கோயிலில் பால்குட சிறப்பு வழிபாடு

ஒரு டன் ரேஷன் அரிசி பறிமுதல்: ஒருவா் கைது

மோட்டாா் சைக்கிள் மீது லாரி மோதியதில் 2 தொழிலாளா்கள் உயிரிழப்பு

லாரி மோதியதில் தனியாா் நிறுவன ஊழியா் உயிரிழப்பு

SCROLL FOR NEXT