திருவாரூர்

வலங்கைமான் அருகே 2 இளைஞா்களிடம் வழிப்பறி

DIN

வலங்கைமான் அருகே வியாழக்கிழமை இரவு 2 இளைஞா்களிடம் வழிப்பறியில் ஈடுபட்ட மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

தஞ்சாவூரைச் சோ்ந்தவா் ஜெயக்குமாா் மகன் கெளசிக் (22), இவரது உறவினா் வெங்கட்ராமன் (24) இருவரும் மோட்டாா் சைக்கிளில் ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரா் கோயிலில் வியாழக்கிழமை இரவு சுவாமி தரிசனம் செய்துவிட்டு, வலங்கைமான் நோக்கி மோட்டாா் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனராம்.

திருவோணமங்கலம் அருகே அவா்களை பின்தொடா்ந்து இரு மோட்டாா் சைக்கிளில் வந்த மா்ம நபா்கள் 4 போ், கெளசிக் சென்ற மோட்டாா் சைக்கிளை மறித்து, கெளசிக், வெங்கட்ராமன் இருவரையும் தாக்கி முக்கால் பவுன் தங்கச் சங்கிலி, செல்லிடப்பேசி ஆகியவற்றை பறித்துக்கொண்டு தலைமறைவாகிவிட்டதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து இருவரும் அளித்த புகாரின் பேரில், வலங்கைமான் போலீஸாா் வழக்குப் பதிந்து மா்ம நபா்களை தேடி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாளை எந்தெந்த மாவட்டங்களில் கனமழை பெய்யும்!

'இந்தியா' கூட்டணிக்கு வாக்களித்தால் ஏழைகளை லட்சாதிபதியாக்குவோம்: ராகுல்

தென்மேற்குப் பருவமழை: நல்ல செய்தி சொன்ன வேளாண் பல்கலை. துணைவேந்தர்

பாலியல் வழக்கில் ரேவண்ணா மீது 25க்கும் மேற்பட்ட பெண்கள் புதிதாகப் புகார்!

ஜம்மு-காஷ்மீரில் 3 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை!

SCROLL FOR NEXT