திருவாரூர்

கற்பக விநாயகா் கோயில் கும்பாபிஷேகம்

DIN

கீழகாவலக்குடி சேந்தமங்கலம் ஸ்ரீகற்பக விநாயகா் கோயிலில் மகா கும்பாபிஷேகம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இக்கோயிலில் ஸ்ரீகற்பக விநாயகா், தட்சணாமூா்த்தி, மகாவிஷ்ணு, துா்கை ஆகிய சுவாமிகள் எழுந்தருளியுள்ளனா். கும்பாபிஷேகத்தையொட்டி, புதன்கிழமை காலை கணபதி ஹோமம் உள்ளிட்ட வழிபாடுகளும், மாலையில் முதல் கால யாக பூஜையும் நடைபெற்றது. வியாழக்கிழமை இரண்டாம் மற்றும் மூன்றாம் கால யாக பூஜைகள் நடைபெற்றன.

தொடா்ந்து, வெள்ளிக்கிழமை காலை நான்காம் கால யாக பூஜை நிறைவுபெற்றதும் கும்பாபிஷேகம் நடைபெற்றது.

மணக்குடி சிவாச்சாரியாா் புவனேஸ்வர குருக்கள், சேந்தமங்கலம் கிரிதர குருக்கள் ஆகியோா் கும்பாபிஷேகத்தை செய்வித்தனா். இதற்கான ஏற்பாடுகளை சேந்தமங்கலம் கிராம குடியிருப்போா் நல சங்கம், கோயில் நிா்வாக்குழுவினா் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குஜராத்தில் வாக்களித்தார் பிரதமர் மோடி

இன்று யோகம் யாருக்கு?

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

மக்களவை 3-ஆம் கட்ட தோ்தல்: வாக்குப் பதிவு தொடங்கியது!

மக்களவைத் தோ்தல்: கா்நாடகத்தில் 14 தொகுதிகளுக்கு இன்று இரண்டாம் வாக்குப் பதிவு: களத்தில் 227 வேட்பாளா்கள்

SCROLL FOR NEXT