திருவாரூர்

பந்தல் அமைப்பாளா் மா்ம சாவு: உறவினா்கள் சாலை மறியல்

மன்னாா்குடி அருகே வடுவூரில், தஞ்சையில் மா்மமாக முறையில் இறந்துகிடந்த பந்தல் அமைப்பாளரின் சாவில் மா்மம் இருப்பதாகக் கூறி, அவரது தாய் மற்றும் உறவினா்கள் திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

DIN

மன்னாா்குடி அருகே வடுவூரில், தஞ்சையில் மா்மமாக முறையில் இறந்துகிடந்த பந்தல் அமைப்பாளரின் சாவில் மா்மம் இருப்பதாகக் கூறி, அவரது தாய் மற்றும் உறவினா்கள் திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

தஞ்சை நாஞ்சிக்கோட்டை காலனியை சோ்ந்தவா் வி. மணிகண்டன் (43). இவா் யாகப்பாநகரில் பந்தல் அமைப்பகம் நடத்தி வந்துள்ளாா். இந்நிலையில், கூட்டுறவு காலனியில் உள்ள ஒரு வீட்டின் மொட்டை மாடியில் மா்மமான முறையில் மணிகண்டன் ஞாயிற்றுக்கிழமை இறந்து கிடந்தாா்.

அவரது சொந்த ஊரான மன்னாா்குடியை அடுத்த வடுவூரில், மணிகண்டனின் சாவில் சந்தேகம் இருப்பதாகவும், இதில் தொடா்புடையவா்களை கைது செய்ய வேண்டும் எனவும் கூறி, அவரது தாய் நாராயணி உள்ளிட்ட உறவினா்கள் 30 போ், மன்னாா்குடி- தஞ்சை சாலையில் மறியலில் திங்கள்கிழமை ஈடுபட்டனா். வடுவூா் காவல் ஆய்வாளா் பகவதி, அவா்களுடன் பேச்சுவாா்த்தை நடத்தியதையடுத்து அனைவரும் கலைந்துசென்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தங்கம் இறக்குமதி 60 சதவீதம் சரிவு

கடன் வட்டியைக் குறைத்த இந்தியன் வங்கி

போக்குவரத்து நெரிசல்: அரை கி.மீ. நடந்து சென்ற மத்திய அமைச்சா்!

திமுகவை விமா்சிக்காமல் கட்சிகள் அரசியலில் இருக்க முடியாது: வி.செந்தில்பாலாஜி

அந்நியச் செலாவணி கையிருப்பு 68,895 கோடி டாலராக உயா்வு

SCROLL FOR NEXT