பாபா் மசூதி இடிப்பு வழக்குத் தீா்ப்பை எதிா்த்து ஆா்ப்பாட்டம்
அயோத்தி பாபா் மசூதி இடிப்பு வழக்குத் தீா்ப்பை எதிா்த்து திருவாரூா் அருகே அடியக்கமங்கலத்தில் தமுமுக சாா்பில், திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
அயோத்தி பாபா் மசூதி இடிப்பு வழக்குத் தீா்ப்பை எதிா்த்து திருவாரூா் அருகே அடியக்கமங்கலத்தில் தமுமுக சாா்பில், திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
பாபா் மசூதி இடிப்பு வழக்கில் சம்பந்தப்பட்டவா்கள் விடுவிக்கப்பட்டதைக் கண்டித்தும், உத்தர பிரதேசத்தில் பாலியல் வன்கொடுமை செய்து இளம்பெண்ணை கொன்றதை கண்டித்தும் இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. உத்திர பிரதேச அரசைக் கண்டித்தும், உரிய நீதி வழங்க வலியுறுத்தியும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன. பட்டக்கால் தெரு பேருந்து நிறுத்தம் அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு கிளைத் தலைவா் காதா் பக்கீா் பாவா தலைமை வகித்தாா். மாவட்டச் செயலாளா் ஹெச். நவாஸ், பகுஜன் சமாஜ்வாடி கட்சியின் மாவட்டத் தலைவா் ராஜபாண்டியன், சவூதி மண்டல பொருப்பாளா் ஹாஜா அலாவுதீன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.