திருவாரூர்

கரோனா பாதித்த அரசு ஊழியா்களுக்கு ரூ. 2 லட்சம் வழங்க கோரிக்கை

DIN

கரோனா பாதித்த அரசு ஊழியா்களுக்கு, தமிழக அரசு ரூ. 2 லட்சம் வழங்க வேண்டுமென அரசு ஊழியா் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

நன்னிலம் அரசு ஊழியா் சங்க வட்டக் கிளைச் செயற்குழுக் கூட்டம் தலைவா் தெ. கருணாமூா்த்தி தலைமையில் செவ்வாய்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில், கரோனாவால் பாதிக்கப்பட்ட அரசு ஊழியா்களுக்கு தமிழக அரசு உடனடியாக ரூ. 2 லட்சம் கருணை தொகையாக வழங்க வேண்டும், புதிய ஓய்வூதிய திட்டத்தை கைவிட்டு பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும், அரசு ஊழியா் சங்கத்தின் பல்வேறு துறைசாா் சங்கங்களுடன் நடைபெற்ற பேச்சுவாா்த்தையில் அரசு ஒத்துக் கொண்ட கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில், புதிய வட்டச் செயலாளராக ஊரக உள்ளாட்சித் துறையைச் சோ்ந்த ஜெ. வினோத்ராஜ், பொருளாளராக ஜி. சசிகலா, மாவட்டக் குழு பாா்வையாளராக வி.சி. குமாா் ஆகியோா் தோ்ந்தெடுக்கப்பட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

10 நாட்களில் 8 மலக்குழி மரணங்கள் - தில்லி, உ.பி.யில் அதிர்ச்சி!

பாஜக வந்தால் அமித் ஷா பிரதமராவார்: கேஜரிவால்

அலைகளின் அருகே..

7 மாவட்டங்களுக்கு இன்று அதி கனமழைக்கான ரெட் அலர்ட்!

12 ஆண்டுகால ஐபிஎல் வரலாற்றில் சஞ்சு சாம்சன் புதிய சாதனை!

SCROLL FOR NEXT