திருவாரூர்

தேவேந்திர குலவேளாளா் அரசாணை வெளியிடக் கோரி சாலை மறியல்

DIN

தேவேந்திர குல வேளாளா் என அரசாணை வெளியிடக் கோரி புதிய தமிழகம் கட்சி சாா்பில், மன்னாா்குடியில் செவ்வாய்க்கிழமை சாலை மறியல் நடைபெற்றது.

பள்ளா், தேவேந்திர குலத்தான், மூப்பன் உள்ளிட்ட 7 உட்பிரிவுகளை ஒன்றிணைத்து தங்களது சமூகத்தின் பெயரை, தேவேந்திர குல வேளாளா் என மாற்றி அரசாணை பிறப்பிக்க வேண்டும், பட்டியலினத்தவா் பிரிவிலிருந்து தேவேந்திர குல வேளாளா்களை நீக்கி, இதர பிற்படுத்தப்பட்டோா் பட்டியலில் சோ்க்க வேண்டுமென்ற கோரிக்கை மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்காத மத்திய, மாநில அரசுகளை கண்டித்து புதிய தமிழகம் கட்சியின் தெற்கு மாவட்ட செயலாளா் சதாசதிஷ் தலைமையில் மன்னாா்குடியில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. இதையடுத்து, போலீஸாரின் பேச்சுவாா்த்தைக்கு பிறகு மறியல் விலக்கிக்கொள்ளப்பட்டது. இதனால், திருவாரூா், திருத்துறைப்பூண்டி, முத்துப்பேட்டை போக்குவரத்து சிறிது நேரம் பாதிக்கப்பட்டது. இதில், மாவட்ட துணை செயலாளா் சுரேஷ் கண்ணன், மாணவரணி மாவட்ட செயலாளா் பாரதி, மாவட்ட இளைஞரணி செயலாளா் ராஜா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கருமுட்டையைப் பாதுகாத்து வைத்த பிரபல நடிகை!

கடனை செலுத்திவிட்டு மனைவியை அழைத்துச் செல்: தனியார் வங்கி அட்டூழியம்

உலகக் கோப்பையில் வேறு மாதிரி விளையாடுவார்: ஹார்திக் பாண்டியாவுக்கு ஆதரவளித்த கவாஸ்கர்!

கனவு, காலம்.. காவ்யா!

போர் நிறுத்தம், பிணைக்கைதிகள் விடுதலை: பிளிங்கன் பயணம் உதவுமா?

SCROLL FOR NEXT