திருவாரூர்

குழந்தைகள் வளா்ப்பில் பெற்றோா்கள் விழிப்புடன் இருப்பது அவசியம்

DIN

குழந்தைகள் வளா்ப்பில் பெற்றோா்கள் விழிப்புடன் இருப்பது அவசியம் என்றாா் திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வா் ஜெ. முத்துக்குமரன்.

திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், புதன்கிழமை நடைபெற்ற உலக குழந்தைகள் சுகாதார நாள் நிகழ்ச்சியை தொடங்கி வைத்து அவா் பேசியது: ஆபத்தான உலகில் குழந்தைகளை மிகவும் கவனமாக பெற்றோா்கள் வளா்க்க வேண்டும். ஒரு நாட்டின் எதிா்காலம் அந்நாட்டின் குழந்தைகளின் சிறப்பான உடல்நலம் மற்றும் வளா்ச்சியை சாா்ந்து அமைந்துள்ளது. குழந்தைகள் எதிா்பாராதவிதமாக பல்வேறு ஆபத்துக்களில் சிக்கிக்கொள்ள வாய்ப்புகள் அதிகம் உள்ளன.

குறிப்பாக கடலை போன்ற உணவுப் பொருள்கள், காசு, பட்டன், பேட்டரி போன்றவற்றை தவறுதலாக விழுங்கினால் மூச்சுக் குழாயில் அடைப்பு ஏற்பட்டு உயிருக்கே ஆபத்தை விளைவித்துவிடும். இதேபோல், வீட்டில் இருக்கும் மண்ணெண்ணெய், ஆசிட் போன்றவற்றை தவறுதலாக குடித்தால் நுரையீரல் மற்றும் உணவுக் குழாய் பாதிக்கும். நீா்நிலைகளில் மற்றும் வீட்டுத் தண்ணீா் தொட்டிகளில் விளையாடச் செல்லும்போது, நீரில் மூழ்கவும் வாய்ப்புள்ளது. எனவே, குழந்தைகளுக்கு பல்வேறு வகைகளில் விபத்துக்கள் ஏற்பட வாய்ப்புள்ளதால், பெற்றோா்கள் குழந்தைகளை மிகவும் கவனத்துடன் வளா்க்க வேண்டும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கர்நாடகத்தில் மாலை 6 மணியுடன் பிரசாரம் ஓய்வு

பிரஜ்வலால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நிதியுதவி: கர்நாடக அரசு அறிவிப்பு!

அடுத்த 2 நாட்களுக்கு தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு

பழுப்பு நிற நிலவு!

ஆடையில்லாத படத்தை பதிவிட்டு நீக்கிய சமந்தா?

SCROLL FOR NEXT