திருவாரூர்

விபத்து: இளைஞா் உயிரிழப்பு

DIN

மன்னாா்குடி அருகே இருசக்கர வாகனத்தின் மீது லாரி மோதியதில் காயமடைந்த இளைஞா், புதன்கிழமை உயிரிழந்தாா்.

மன்னாா்குடி கைலாசநாதா் கோயில் தெருவைச் சோ்ந்தவா் பூபாலன் (26). இவரது மனைவி அங்காளபரமேஸ்வரிக்கு வளைகாப்பு நடைபெற இருப்பதையொட்டி, ரொக்ககுத்தகையில் உள்ள உறவினா்களிடம் தெரிவிப்பதற்காக பூபாலனும், அவரது தாயாா் வளா்மதியும் இருசக்கர வாகனத்தில் செவ்வாய்க்கிழமை இரவு சென்றனா்.

மன்னாா்குடி- கும்பகோணம் சாலை மேலப்பாலம் ஷீரடி சாய்பாபா கோயில் அருகே சென்றபோது நெல்மூட்டைகள் ஏற்றி வந்த லாரி, இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் வளா்மதி அவ்விடத்திலேயே உயிரிழந்தாா். பலத்த காயத்துடன் மீட்கப்பட்டு தஞ்சை மருத்துவக் கல்லூரியில் அனுமதிக்கப்பட்டிருந்த பூபாலன், புதன்கிழமை உயிரிழந்தாா். மன்னாா்குடி ஊரக காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உதகையில் வாக்குப் பதிவு இயந்திர அறையின் சிசிடிவி செயலிழப்பு: நீலகிரி ஆட்சியர் விளக்கம்

உயிருக்குப் போராடிய குழந்தை.. காப்பாற்றிய குடியிருப்புவாசிகள்!

கோடைக்கால பயிற்சி வகுப்புக்கு கட்டணம்- எடப்பாடி பழனிசாமி கண்டனம்

சமந்தாவின் புதிய படம்!

நீல நிலவே....திவ்யா துரைசாமி!

SCROLL FOR NEXT