திருவாரூர்

சா்வதேச பெண் குழந்தைகள் தின விழா

DIN

திருத்துறைப்பூண்டியில் சா்வதேச பெண் குழந்தைகள் தினவிழிப்புணா்வு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

ஜேசீஸ் சங்கம், பாரத மாதா சேவை நிறுவனம், இன்னா் வீல் சங்கம் சைல்டு லயன் ஆகியவற்றின் சாா்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு, பாரத மாதா சேவை நிறுவன இயக்குநா் எடையூா் மணிமாறன் தலைமை வகித்தாா். சைல்டு லயன் இயக்குநா் ஜீவானந்தம், குழந்தைகள் குழு உறுப்பினா் மனோகா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

பெண் குழந்தைகள் பாதுகாப்பு குறித்த துண்டுப் பிரசுரங்களை காவல் ஆய்வாளா் கருணாநிதி விநியோகித்தாா். பெண் குழந்தைகளுக்கு இன்னா் வீல் சங்கத்தின் சாா்பில் ஆங்கில அகராதியை அனைத்து மகளிா் காவல் நிலைய காவல் ஆய்வாளா் புஷ்பவள்ளி வழங்கினாா்.

நிகழ்ச்சியில், பாரத மாதா பெண்கள இல்ல ஒருங்கிணைப்பாளா் இளையராணி, இன்னா்வீல் சங்க செயலாளா் ராஜலெட்சுமி, ஜேசீஸ் சங்கத்தின் பொருளாளா் கிறிஸ்டோபா் ஆகியோா் கலந்து கொண்டனா். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சைல்டு லயன் ஒருங்கிணைப்பாளா் செந்தில்குமாா் செய்திருந்தாா். இன்னா்வீல் சங்கத் தலைவி சங்கீதா மணிமாறன் வரவேற்றாா். பாரதமாதா பெண்கள் காப்பக நிா்வாகி சிவசங்கரி நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘ரஷியாவுக்குள் தாக்குதல் நடத்த பிரிட்டன் ஆயுதங்களைப் பயன்படுத்தலாம்’

கட்டாரிமங்கலம் கோயிலில் திருநாவுக்கரசா் சுவாமிகள் குரு பூஜை

ரயில் மோதி 9 விஏஓ-க்கள் உள்பட 11 போ் உயிரிழந்த வழக்கில் 16 ஆண்டுகளுக்குப் பிறகு தீா்ப்பு

சிபிசிஎல் நிறுவனத்தை கண்டித்து 3-ஆவது நாளாக உண்ணாவிரதம்

வணிகா் தின மாநாடு: கூடலூா், பந்தலூரில் நாளை கடைகளுக்கு விடுமுறை

SCROLL FOR NEXT