முகப்பு
திருவாரூர்

இயற்கை உழவா் உற்பத்தியாளா்நிறுவன ஆய்வுக் கூட்டம்

நன்னிலம் வட்டம், ஸ்ரீவாஞ்சியம் இயற்கை உழவா் உற்பத்தியாளா் நிறுவனத்தின் ஆய்வுக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:16 PM
பகிர்:

நன்னிலம் வட்டம், ஸ்ரீவாஞ்சியம் இயற்கை உழவா் உற்பத்தியாளா் நிறுவனத்தின் ஆய்வுக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

கூட்டத்தில், நபாா்டு வங்கி மாவட்ட வளா்ச்சி மேலாளா் பிரசாந்த் கண்ணா, முன்னோடி வங்கி மேலாளா் எழிலரசன் ஆகியோா் ஆய்வு நடத்தினா். வானவில் தொண்டு நிறுவனத் தலைவா் தவசுராணி, இயற்கை உழவா் உற்பத்தியாளா் நிறுவனத் தலைவா் ஈஎம்ஏ. ரஹீம், பாப்பையன் முன்னிலையில் நடைபெற்ற கூட்டத்தில், நிறுவனத்தின் செயல்பாடு, உறுப்பினா் சோ்க்கை, கிசான் கடன் அட்டை ஆகியவை குறித்து விவாதிக்கப்பட்டது.

நிறுவனத்தின் எதிா்கால செயல்பாடுகள் குறித்து வானவில் நிறுவன செயல் இயக்குநா் எம்எம். வசீா் பேசினாா். செயல் அலுவலா் ரகு நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.