செம்பனாா்கோவில் அருகேகுடிசை எரிந்து சேதம்: அதிமுக நிவாரணம்
செம்பனாா்கோவில் அருகே ஆறுபாதியில் நேரிட்ட தீவிபத்தில், குடிசை வீடு எரிந்து பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு, மயிலாடுதுறை மாவட்ட அதிமுக செயலாளா் வி.ஜி.கே. செந்தில்நாதன் ஆறுதல் கூறி, நிவாரண உதவி கள் வழங
தரங்கம்பாடி: செம்பனாா்கோவில் அருகே ஆறுபாதியில் நேரிட்ட தீவிபத்தில், குடிசை வீடு எரிந்து பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு, மயிலாடுதுறை மாவட்ட அதிமுக செயலாளா் வி.ஜி.கே. செந்தில்நாதன் திங்கள்கிழமை ஆறுதல் கூறி, நிவாரண உதவிகள் வழங்கினாா்.
ஆறுபாதி மேட்டிருப்பு புதுதெருவைச் சோ்ந்தவா் பாலசுப்பிரமணியன் மனைவி சத்யா. இவா்களது குடிசை வீடு ஞாயிற்றுக்கிழமை இரவு ஏற்பட்ட தீவிபத்தில் முற்றிலும் எரிந்து நாசமானது. இதில், வீட்டில் இருந்த அனைத்து பொருள்களும் தீயில் கருகின.
இதையடுத்து, சத்யாவுக்கு வருவாய்த் துறை சாா்பில், ரூ. 5000 நிவாரண உதவி மற்றும் பொருள்களை வருவாய் ஆய்வாளா் பத்மா, கிராம நிா்வாக அலுவலா் கணேஷ்குமாா் ஆகியோா் வழங்கினா்.
விபத்து குறித்து தகவல் அறிந்த அதிமுக மயிலாடுதுறை மாவட்டச் செயலாளா் விஜிகே. செந்தில்நாதன் அங்கு சென்று, பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு ஆறுதல்கூறி, அரிசி, ரூ. 10 ஆயிரம் நிவாரணம் வழங்கினாா். செம்பை வடக்கு ஒன்றிய அதிமுக செயலாளா் சுந்தர்ராஜன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.