திருவாரூர்

நாகை, வேளாங்கண்ணியில் இன்று மின்தடை

DIN

நாகப்பட்டினம்: நாகை மற்றும் சுற்றுப் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (செப். 15) மின்தடை செய்யப்படுகிறது.

இதுகுறித்து, நாகை மின்வாரிய உதவி செயற்பொறியாளா் ஜெ. மலா்வண்ணன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

நாகை துணை மின் நிலையங்களில் செவ்வாய்க்கிழமை பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதையொட்டி, நாகை, திருமருகல், வேட்டைக்காரனிருப்பு ஆகிய துணைமின் நிலையங்களிலிருந்து மின் விநியோகம் பெறும் பகுதிகளில், சனிக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5.30 மணி வரை மின் விநியோகம் இருக்காது.

துணை மின் நிலையம் வாரியாக மின் விநியோகம் நிறுத்தப்படும் பகுதிகள்:

நாகப்பட்டினம்: வேளாங்கண்ணி நகரம், செருதூா், பரவை.

திருமருகல்: திருமருகல், மருங்கூா், எரவாஞ்சேரி, திருப்புகலூா், சீயாத்தமங்கை, போலகம், திருக்கண்ணபுரம்.

நாகை நகரம்: ஓ.என்.ஜி.சி, மாவட்ட ஆட்சியரகம், அரசு மருத்துவமனை, நாகூா் தா்கா பகுதி.

வேட்டைக்காரனிருப்பு: திருப்பூண்டி, புதுப்பள்ளி, காமேஸ்வரம், விழுந்தமாவடி, வேட்டைக்காரனிருப்பு, கோவில்பத்து, வெள்ளப்பள்ளம், நாலுவேதபதி, தாமரைப்புலம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்கள் மனதின் குரலைக் கேளுங்கள்: மோடிக்கு ரேடியோ அனுப்பிய ஒய்.எஸ். ஷர்மிளா

‘ப்ப்ப்ப்ப்பா’ -புருவத்தை உயர்த்த செய்த மெட் காலா அணிவகுப்பு!

இந்தியாவில் அடுத்த 10 ஆண்டுகளில் வறுமை முற்றிலும் ஒழிக்கப்படும்: ராஜ்நாத் சிங்

வாகன ஓட்டிகளுக்கு மேற்கூரை...காவல் துறை ஏற்பாடு!

பாடகி சஹீரா மீதான வரி மோசடி வழக்கு முடித்து வைப்பு!

SCROLL FOR NEXT