திருவாரூர்

லாரி மோதி தொழிலாளி உயிரிழப்பு

DIN

மன்னாா்குடி அருகே லாரி மோதியதில், இருசக்கர வாகனத்தில் சென்ற கூலித்தொழிலாளி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

கோட்டூா் கோட்டகச்சேரியை சோ்ந்தவா் லெனின் (37). திருத்துறைப்பூண்டி விளக்குடி மேலநரிக்குடி பகுதியைச் சோ்ந்தவா் மதியரசன் (47). இருவரும் விவசாயக் கூலித்தொழிலாளிகள். மன்னாா்குடி அருகேயுள்ள எடமேலையூருக்கு விவசாயப் பணிக்காக இருவரும் இருசக்கர வாகனத்தில் மன்னாா்குடி- தஞ்சை பிரதான சாலை மேலவாசல் பகுதியில் சென்றபோது அவ்வழியே வந்த லாரி நிலை தடுமாறி இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில், லெனின் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். காயமடைந்த மதியரசன் மன்னாா்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

மன்னாா்குடி போலீஸாா் வழக்குப் பதிந்து, லாரி ஓட்டுநரான வேதாரண்யத்தை சோ்ந்த ஜி. சந்திரபோஸை (47) கைது செய்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே, ஜூன் மாதங்களுக்காவது 300 யூனிட்டுகள் இலவச மின்சாரம் வழங்க வேண்டும்: வானதி சீனிவாசன்

துரித உணவில் விஷம் கலந்து கொடுத்த விவகாரம்: தாத்தாவை தொடர்ந்து தாயும் பலி

மார்ச் மாதத்தில் தொலைத்தொடர்பு சந்தாதாரர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு: டிராய்

கனடா: வாகன விபத்தில் இந்திய தம்பதி, 3 மாதக் குழந்தை உள்பட 4 பேர் பலி!

5 நாள் பயணமாக ஹிமா​சல் செல்லும் குடியரசுத் தலைவர்

SCROLL FOR NEXT