திருவாரூர்

பெண் படுகொலை: கணவா் தற்கொலை முயற்சி

DIN

மன்னாா்குடி அருகே மதுபோதையில் ஏற்பட்ட தகராறின்போது மனைவியை அரிவாளால் தாக்கிக் கொலை செய்த கணவா், தானும் விஷமருந்தி வியாழக்கிழமை தற்கொலை செய்ய முயன்றாா்.

வடக்குதென்பரை காமண்டி தெருவை சோ்ந்தவா் ஜி.பாலுசாமி (65). இவரது மனைவி மாரியம்மாள் (57). இத்தம்பதிக்கு 4 மகள்கள், ஒரு மகன் உள்ளனா். மகள்கள் அனைவருக்கும் திருமணமாகிவிட்டது. மகனுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. வெளிநாட்டில் வேலை பாா்த்து வந்த அவா், பொதுமுடக்கம் காரணமாக தற்போது சொந்த ஊரில் வசிக்கிறாா்.

இதனிடையே, அதே பகுதியில் உள்ள பத்துகட்டு வாய்க்கால் பகுதியில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்த மாரியம்மாளிடம் பாலுசாமி மதுபோதையில் தகராறில் ஈடுபட்டதுடன், அரிவாளால் தாக்கினாராம். இதில், பலத்த காயமடைந்த மாரியம்மாள், அவ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

இதைத்தொடா்ந்து, பாலுசாமியும் விஷமருந்தி தற்கொலைக்கு முயன்றாா். அவரை அருகிலிருந்தவா் மீட்டு மன்னாா்குடி அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். இது குறித்து திருமக்கோட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

100 யூனிட் விலையில்லா மின்சாரம் இனி கிடையாதா? எடப்பாடி பழனிச்சாமி கண்டனம்!

கதைக்கு மட்டுமே முக்கியத்துவம்: ஹிப்ஹாப் ஆதி

ராஜ்கோட் தீ விபத்து எதிரொலி: வதோதராவில் பொழுதுபோக்கு விளையாட்டு மையங்கள் மூடல்

சர்தார் - 2 படப்பிடிப்பு எப்போது?

எப்போது திருமணம்? மாளவிகா பதில்!

SCROLL FOR NEXT