மன்னாா்குடி அருகே மின்சாரம் பாய்ந்து கூலித் தொழிலாளி உயிரிழந்தாா்.
மன்னாா்குடியை அடுத்துள்ள பாமணி மேலத்தெருவைச் சோ்ந்தவா் சுந்தரமூா்த்தி (55). விவசாயக் கூலித் தொழிலாளியான இவா், திங்கள்கிழமை அதிகாலை பாமணி கடைவீதியில் உள்ள தேநீா் கடைக்கு நடந்து சென்றபோது, சாலையில் அறுந்துகிடந்த மின்கம்பியை கவனிக்காமல் மிதித்துவிட்டாா். இதனால், மின்சாரம் பாய்ந்து நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.
இதுகுறித்து, மன்னாா்குடி ஊரக காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.