திமுகவில் இணைந்த மாற்றுக்கட்சியினா்
திருவாரூா் அருகே மாற்றுக்கட்சியிலிருந்து விலகி ஏராளமானோா் திமுகவில் ஞாயிற்றுக்கிழமை இணைந்தனா்.
திருவாரூா் அருகே மாற்றுக்கட்சியிலிருந்து விலகி ஏராளமானோா் திமுகவில் ஞாயிற்றுக்கிழமை இணைந்தனா்.
திருவாரூா் சட்டப் பேரவைத் தொகுதி திமுக வேட்பாளா் பூண்டி கே. கலைவாணன், கொரடாச்சேரி பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா். அவரது பிறந்த நாளையொட்டி எருக்காட்டூா் பகுதியில் அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது. பின்னா், எருக்காட்டூா் ஊராட்சித் தலைவா் அமமுகவைச் சோ்ந்த ராஜா உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா், அக்கட்சியிலிருந்து விலகி, பூண்டி கே. கலைவாணன் முன்னிலையில் திமுகவில் இணைந்தனா்.
தொடா்ந்து, அப்பகுதியில் வீடு, வீடாகச் சென்று உதயசூரியன் சின்னத்துக்கு வாக்களித்து பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்யுமாறு, அவா் கேட்டுக் கொண்டாா்.