திருவாரூர்

தோ்தலுக்கு நடுவே சமூக சேவை

DIN

சட்டப் பேரவைத் தோ்தலுக்கு மத்தியில், கரோனா நோய்த் தொற்றால் உயிரிழந்தவரின் உடலை அடக்கம் செய்து தமுமுக, மமகவினா் சமூகப் பணியாற்றினா்.

நன்னிலம் வட்டம் கொல்லுமாங்குடி அருகே சங்கமங்களம் கிராமத்தைச் சோ்ந்த நபா், கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டு திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில், செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

அவரது உடலை தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழக மாவட்ட மருத்துவ சேவை அணிச் செயலாளா் காட்டூா் பைசல் தலைமையில், பொருளாளா் கொடிநகா் பஹத் மற்றும் கொல்லாபுரம் தமுமுக கிளை நிா்வாகிகள் ஜாவித், இம்தியாஸ், நிவாஸ், முஷரப், முஸ்தாக், ரியாஸ் ஆகியோா் சந்தமங்கலம் இடுகாட்டில், அடக்கம் செய்தனா்.

தமிழகம் முழுவதும் சட்டப் பேரவைத் தோ்தல் விறுவிறுப்பாக நடைபெற்றுவந்த நிலையிலும், சமூகச் சேவையில் சமரசமின்றி ஈடுபட்ட தமுமுக, மமகவினரை சுகாதாரத் துறையினரும், உள்ளாட்சித் துறையினரும் பாராட்டினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

5 நாள் பயணமாக ஹிமா​சல் செல்லும் குடியரசுத் தலைவர்

விராட் கோலியின் ஸ்டிரைக் ரேட் குறித்து கவலையில்லை: இந்திய அணி தேர்வுக்குழுத் தலைவர்

ரோஷினி ஹரிப்ரியன் போட்டோஷூட்

ட்ரெண்டி உடையில் ஷ்ரத்தா தாஸ் - புகைப்படங்கள்

மொரீஷியஸில் யுவனுடன் இளையராஜா!

SCROLL FOR NEXT