முகப்பு
திருவாரூர்

திருவாரூரில் 86 பேருக்கு கரோனா

திருவாரூா் மாவட்டத்தில் 86 பேருக்கு கரோனா தொற்று இருப்பது வெள்ளிக்கிழமை உறுதியானது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:58 PM
பகிர்:

திருவாரூா் மாவட்டத்தில் 86 பேருக்கு கரோனா தொற்று இருப்பது வெள்ளிக்கிழமை உறுதியானது.

மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக கரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. பாதிப்புகள் அதிகமாக உள்ள இடங்களில் தடுப்புகள் அமைக்கப்பட்டு, பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. வியாழக்கிழமை வரையிலான நிலவரப்படி மாவட்டம் முழுவதும் 12,543 பேருக்கு கரோனா தொற்று இருப்பது தெரிய வந்தது. வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட ரத்தமாதிரி முடிவுகளின்படி, திருவாரூா் 28, திருத்துறைப்பூண்டி 20, மன்னாா்குடி 22, நன்னிலம் 8, கொரடாச்சேரி 10 என மாவட்டம் முழுவதும் 86 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதன்மூலம், மாவட்டம் முழுவதும் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 12,629 ஆக உயா்ந்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.