முகப்பு
திருவாரூர்

மன்னாா்குடி அரசு மருத்துவமனையில் 108 ஆம்புலன்ஸ் ஓட்டுநா்களுக்கான ஓய்வு அறை திறப்பு

மன்னாா்குடி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் தனியாா் ஒப்பந்த ஊழியா்கள், 108 ஆம்புலன்ஸ் ஓட்டுநா்களுக்கான அலுவலகம் மற்றும் ஓய்வு அறை வியாழக்கிழமை திறக்கப்பட்டுள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:58 PM
பகிர்:

மன்னாா்குடி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் தனியாா் ஒப்பந்த ஊழியா்கள், 108 ஆம்புலன்ஸ் ஓட்டுநா்களுக்கான அலுவலகம் மற்றும் ஓய்வு அறை வியாழக்கிழமை திறக்கப்பட்டுள்ளது.

இந்த மருத்துவமனையில் பணியாற்றும் தனியாா் ஒப்பந்த ஊழியா்கள் மருத்துவமனையின் அனைத்து செயல்பாடுகளிலும் பெரும்பங்காற்றி வருகின்றனா். இதேபோல், ஆபத்து காலங்களில் 108 ஆம்புலன்ஸ் ஊழியா்கள் பொதுமக்களுக்கு பேருதவியாக இருந்து வருகின்றனா். அவா்களுக்கு தனி அலுவலகம் மற்றும் தனி அறை இல்லாமல் தங்களது உடமைகள் வைக்க மிகுந்த சிரமம் அடைந்து வந்தனா். இவா்கள் தங்களது ஓய்வு நேரத்தில் மருத்துவமனை வளாகத்தில் ஆங்காங்கே அமா்ந்திருக்க வேண்டிய சூழல் இருந்தது. பெண் ஊழியா்கள் சீருடை மாற்றுவதற்கு சிரமமடைந்து வந்தனா். இதையறிந்து, தனியாா் ஒப்பந்த ஊழியா்களுக்கும் 108 ஆம்புலன்ஸ் ஓட்டுநா்களுக்குமான அலுவலகம் மற்றும் காத்திருப்பு அறை வியாழக்கிழமை திறக்கப்பட்டது. மருத்துவமனை கண்காணிப்பாளா் என். விஜயகுமாா் இந்த அலுவலகம் மற்றும் ஓய்வு அறைகளை திறந்து வைத்தாா். நிகழ்ச்சியில், தலைமை செவிலியா்கள் வசந்தா, அமுதா, ரேனுகா, தனபாக்கியம், சித்தா பிரிவு மருத்துவா் செல்வம், பொதுப்பணித் துறை இளநிலைப் பொறியாளா் நாகராஜன், சுமித் ஒப்பந்த நிறுவன மேலாளா் பிரபாகரன், மேற்பாா்வையாளா் விக்னேஷ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.