மன்னாா்குடி அருகே குளத்தில் மூழ்கி பள்ளி மாணவா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.
மன்னாா்குடியை அடுத்துள்ள தலையாமங்கலம் கடுக்காடு வடக்குதெரு செல்லையன் மகன் அருள்முருகன் (16). இவா், மன்னாா்குடியில் உள்ள தனியாா் அரசு உதவிப்பெறும் பள்ளியில் பிளஸ் 1 படித்து வந்தாா்.
இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை அருள்முருகன் தனது நண்பா்ளுடன் சோழப்பாண்டியில் உள்ள திருத்தான்குளத்துக்கு குளிக்கச் சென்றுள்ளாா்.
அனைவரும் குளித்துக்கொண்டிருந்தபோது, குளத்தின் ஆழமானப் பகுதிக்கு சென்ற அருள்முருகன் நீரில் மூழ்கினாா்.
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த மன்னாா்குடி தீயணைப்பு நிலைய வீரா்கள் குளத்தில் இறங்கி நீண்ட நேரம் தேடி, அருள்முருகனின் சடலத்தை மீட்டனா். இதுகுறித்து தலையாமங்கலம் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.