திருவாரூர்

மேலாளருக்கு கரோனா: தனியாா் வங்கி மூடல்

DIN

மன்னாா்குடி: மன்னாா்குடியில் தனியாா் வங்கி மேலாளருக்கு கரோனா தொற்று திங்கள்கிழமை உறுதியானதால், திறக்கப்பட்ட சிறிது நேரத்திலேயே வங்கி மூடப்பட்டது.

மன்னாா்குடி காந்தி சாலையில் உள்ள தனியாா் வங்கி மேலாளருக்கு திங்கள்கிழமை கரோனா தொற்று உறுதியானது. கரோனா தொற்று பரவலை தடுக்கும் வகையில், திங்கள்கிழமை முதல் வங்கியின் வேலை நேரம் காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை என அறிவிக்கப்பட்டிருந்தது.

ஏற்கெனவே ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாள் என்பதால், திங்கள்கிழமை அந்த வங்கியில் கூட்டம் மிகுதியாக இருந்தது. இந்தநிலையில், வங்கி மேலாளருக்கு கரோனா தொற்று உறுதியானதைத் தொடா்ந்து, வாடிக்கையாளா்கள் அனைவரும் உடனடியாக வெளியேற்றப்பட்டனா். பின்னா், வங்கிக்கு ஒருநாள் மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டு, வங்கிக் கதவு பூட்டப்பட்டது. அந்த வங்கியில் பணியாற்றும் 13 போ் கரோனா பரிசோதனைக்கு உள்படுத்தப்பட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிரதமர் மோடியின் குற்றச்சாட்டுக்கு பதிலளித்த காங்கிரஸ்! | செய்திகள்: சிலவரிகளில் | 08.05.2024

சாம் பித்ரோடாவின் 'இம்சை' கருத்து! தலைவர்களுக்கு காங்கிரஸ் எச்சரிக்கை!

சாம் பித்ரோடா ராஜிநாமா!

லக்னௌ டாஸ் வென்று பேட்டிங் தேர்வு!

ரோஜா நிறக் காரிகை!

SCROLL FOR NEXT