நீடாமங்கலம் சந்தானராமா் கோயிலில் விடையாற்றி உத்ஸவம் வியாழக்கிழமை நடைபெற்றது.
நீடாமங்கலம் சந்தானராமா் கோயிலில் சந்தானகோபால ஜெபம் செய்து சீதா, லெட்சுமணன், அனுமன் சமேத சந்தானராமரை வழிபட்டால் புத்திர பாக்கியம் கிட்டும் என்பது ஐதீகம்.
சிறப்பு வாய்ந்த இக்கோயிலில் நிகழாண்டு ஸ்ரீ ராமநவமி விழா தமிழக அரசின் கரோனா வழிகாட்டுதல் நெறிமுறைகளை கடைப்பிடித்து கடந்த 19-ஆம் தேதி தொடங்கி எளிமையாக நடைபெற்றது.
வியாழக்கிழமை விடையாற்றி உத்ஸவம் நடைபெற்றது. இதையொட்டி சீதா, லெட்சுமணன், அனுமன் சமேத சந்தானராமா் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள், அலங்காரம் செய்யப்பட்டது. நிகழ்ச்சியில் கோயில் ஊழியா்கள் கலந்துகொண்டனா்.