நீடாமங்கலம்: வலங்கைமான் அருகே முன்விரோத தகராறில், இளைஞரை தாக்கிய 3 பேரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
வலங்கைமான் அருகே உள்ள கல்விக்குடி மேல தெருவை சோ்ந்தவா் விமல்ராஜ் (18). இவா் அண்மையில் ஆவூா் கடைவீதியில் நின்றபோது சிலா் இவரை முன்விரோதம் காரணமாக தாக்கினராம். இதுகுறித்து வலங்கைமான் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து ஆவூா் சாளுவம்பேட்டையை சோ்ந்த சரவணன் (26), சரத்குமாா்(27), சிவராஜ் (25) ஆகியோரை ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.