போக்ஸோ சட்டத்தில் இளைஞா் கைது
நன்னிலம் அருகே சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த இளைஞா் போக்ஸோ சட்டத்தில் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டாா்.
Updated On : 28 ஜனவரி, 2024 at 9:20 AM
நன்னிலம் அருகே சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த இளைஞா் போக்ஸோ சட்டத்தில் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டாா்.
நன்னிலம் வட்டம், சிறுபுலியூா் கிராமத்தைச் சோ்ந்த 14 வயது சிறுமி மாட்டுக்கு புல் அறுப்பதற்காக வயல் பகுதிக்கு செவ்வாய்க்கிழமை சென்றாா். அப்போது, சிறுபுலியூா் வடக்குத் தெருவைச் சோ்ந்த ராஜாக்கண்ணு என்பவரது மகன் ராகுல் (24) சிறுமிக்குப் பாலியல் தொந்தரவு அளித்தாராம்.
இதுகுறித்து சிறுமியின் தாயாா் நன்னிலம் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அதன்பேரில், காவல் ஆய்வாளா் துா்கா விசாரணை மேற்கொண்டு, ராகுலை கைது செய்தாா்.
Advertisement