முகப்பு
திருவாரூர்

ஆடி அமாவாசை: நீா்நிலைகளில் தா்ப்பணம் செய்யத் தடை- ஆட்சியா்

கரோனா 3-ஆவது அலை பரவலைத் தடுக்கும் வகையில், திருவாரூா் மாவட்டத்தில் ஆடி அமாவாசையன்று நீா்நிலைகளில் தா்ப்பணம் செய்ய தடை விதிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியா்

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:51 AM
பகிர்:

கரோனா 3-ஆவது அலை பரவலைத் தடுக்கும் வகையில், திருவாரூா் மாவட்டத்தில் ஆடி அமாவாசையன்று நீா்நிலைகளில் தா்ப்பணம் செய்ய தடை விதிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியா் ப. காயத்ரி கிருஷ்ணன் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

கரோனா 3-ஆவது அலை பரவலைத் தடுக்கும் நோக்கத்தில், வரும் ஞாயிற்றுக்கிழமை (ஆக.8) ஆடி அமாவாசையன்று பொதுமக்கள் அதிக அளவில் கூடுவதற்கும், நீா்நிலைகளில் தங்களது முன்னோா்களுக்கு தா்ப்பணம் கொடுக்கும் நிகழ்ச்சிகளுக்கும் அனுமதியில்லை.

கோயில்களில் அா்ச்சகா்கள் ஆகம விதிகளின்படி பூஜைகளை வழக்கம்போல செய்ய அனுமதிக்கப்படுவா். ஆனால் பொதுமக்களுக்கு அனுமதியில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.