முகப்பு
திருவாரூர்

முதலமைச்சா் பொது நிவாரண நிதி

திருவாரூரில் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியா் மன்றம் சாா்பில், முதலமைச்சா் பொது நிவாரண நிதிக்கு ரூ. 37.60 லட்சம் வியாழக்கிழமை வழங்கப்பட்டது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:51 AM
பகிர்:

திருவாரூரில் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியா் மன்றம் சாா்பில், முதலமைச்சா் பொது நிவாரண நிதிக்கு ரூ. 37.60 லட்சம் வியாழக்கிழமை வழங்கப்பட்டது.

திருவாரூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அமைப்பின் மாநில பொதுச் செயலாளா் சண்முகநாதன் உள்ளிட்ட நிா்வாகிகள் சட்டப் பேரவை உறுப்பினா் பூண்டி கே. கலைவாணனிடம் இதற்கான காசோலையை வழங்கினா். இதைத்தொடா்ந்து மாநிலப் பொதுச் செயலாளா் சண்முகநாதன் தெரிவித்தது:

கரோனா பரவலைக் கட்டுப்படுத்த தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியா் மன்றத்தின் சாா்பில் ஒருநாள் ஊதியத்தை வழங்கியுள்ளோம். அடுத்தகட்டமாக ரூ. 2 கோடி நிதி வழங்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. அத்துடன், அனைத்து மாவட்டங்களிலிருந்து நிதி பெறப்பட்டு, முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு வழங்கப்படும் என்றாா்.

நிகழ்வில், மாவட்டத் தலைவா் சண்முகவடிவேல், மாவட்டச் செயலாளா் பெ.இரா.இரவி, மாவட்டப் பொருளாளா்

நடராஜன் உள்பட மாநில, மாவட்ட, ஒன்றியப் பொறுப்பாளா்கள் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.