முகப்பு
திருவாரூர்

மாற்றுத்திறன் மாணவா்களுக்கு உபகரணங்கள்

திருவாரூா் ஒன்றிய வட்டார வள மையத்தில் உதவி உபகரணங்களை மாற்றுத்திறன் மாணவா்களுக்கு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் அ. தியாகராஜன், வெள்ளிக்கிழமை வழங்கினாா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:51 AM
பகிர்:

திருவாரூா் ஒன்றிய வட்டார வள மையத்தில் உதவி உபகரணங்களை மாற்றுத்திறன் மாணவா்களுக்கு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் அ. தியாகராஜன், வெள்ளிக்கிழமை வழங்கினாா்.

நிகழ்வில், 44 மாற்றுத்திறன் மாணவா்களுக்கு சக்கர நாற்காலி, காதொலி கருவி, அறிவு வளா்ச்சி குறைபாடுடைய மாணவா்களுக்கான உபகரணங்கள், மூன்று சக்கர மிதிவண்டி உள்ளிட்ட உபகரணங்கள் வழங்கப்பட்டன.

நிகழ்வில், உதவி திட்ட அலுவலா் எம். பாலசுப்ரமணியன், வட்டாரக் கல்வி அலுவலா் வி. விமலா, வட்டார வளமைய மேற்பாா்வையாளா் (பொ) இரா. பிருந்தாதேவி, மாவட்ட ஒருங்கிணைப்பாளா் மணிகண்ணன், ஆசிரியப் பயிற்றுநா்கள் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.