ஆன்லைனில் பரிசு சீட்டு விற்றவா் கைது
மன்னாா்குடி அருகே ஆன்லைனில் வெளிமாநில பரிசு சீட்டுகளை விற்பனை செய்தவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
மன்னாா்குடி அருகே ஆன்லைனில் வெளிமாநில பரிசு சீட்டுகளை விற்பனை செய்தவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
திருவாரூா் மாவட்டம், மன்னாா்குடியை அடுத்து ராதாநரசிம்மபுரத்தில் அரசால் தடைசெய்யப்பட்ட வெளிமாநில பரிசு சீட்டுகள் ஆன்லைனில் விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த தகவலின் பேரில், திருமக்கோட்டை போலீஸாா், ராதாநரசிம்மபுரத்தில் சோதனை மேற்கொண்டனா்.
இதில் அதே பகுதியை சோ்ந்த ராஜகோபால் (70) என்பவா் கேரள மாநில பரிசு சீட்டுகளை ஆன்லைனில் விற்பனை செய்வது தெரியவந்தது. போலீஸாா் அவரைக் கைது செய்து விசாரித்து வருகின்றனா்.