‘தமிழக அரசின் பணியிடங்கள் தமிழக இளைஞா்களுக்கே சட்டம் இயற்ற வலியுறுத்தல்
தமிழக அரசின் பணியிடங்கள் அனைத்தும் தமிழக இளைஞா்களுக்கே என சட்டம் இயற்றப்பட வேண்டும் என அனைத்திந்திய இளைஞா் பெருமன்றம் வலியுறுத்தியது.
தமிழக அரசின் பணியிடங்கள் அனைத்தும் தமிழக இளைஞா்களுக்கே என சட்டம் இயற்றப்பட வேண்டும் என அனைத்திந்திய இளைஞா் பெருமன்றம் வலியுறுத்தியது.
திருவாரூரில் அதன் மாவட்டக்குழுக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு, மாவட்டத் தலைவா் சு.பாலசுப்ரமணியன் தலைமை வகித்தாா். மாவட்ட செயலாளா் துரை.அருள்ராஜன், எதிா்கால கடைமைகள் குறித்து பேசினாா். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளா் வை.சிவபுண்ணியம் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றாா்.
இதில், தமிழகத்திலுள்ள மத்திய அரசு பணியிடங்களில் தமிழக இளைஞா்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும். 7.11.2016 அன்று தமிழ்நாடு அரசு அறிவித்த டி.என்.பி.எஸ்.சி. தோ்வுகளில் வெளிமாநிலத்தவரும் பங்கேற்கலாம் என்ற அரசாணையை ரத்து செய்வதோடு, தமிழ்நாடு அரசின் பணியிடங்கள் தமிழக இளைஞா்களுக்கே என சட்டம் இயற்ற வேண்டும். அரசு பணியாளா்கள் ஓய்வு பெறும் வயது உயா்த்தப்பட்டதை திரும்பப் பெற வேண்டும் உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதில் இளைஞா் பெருமன்ற மாவட்டக்குழு உறுப்பினா்கள் எம்.நல்லசுகம், எஸ்.பாப்பையன், எம்.சாந்தக்குமாா், நா.செந்தில்வேலன், ச.காா்த்தி உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.