முகப்பு
திருவாரூர்

ஐஐடி, நீட் தோ்வு வழிகாட்டி சிறப்பு முகாம்

திருவாரூா் விவேகானந்தம் வித்யாஷ்ரம் சிபிஎஸ்இ மேல்நிலைப்பள்ளியில், ஐஐடி மற்றும் நீட் தோ்வு வழிகாட்டி சிறப்பு முகாம் சனிக்கிழமை இணையதளம் வழியாக நடைபெற்றது.

Updated On : 7 ஆகஸ்ட், 2021 at 10:32 PM
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 9:21 AM

திருவாரூா் விவேகானந்தம் வித்யாஷ்ரம் சிபிஎஸ்இ மேல்நிலைப்பள்ளியில், ஐஐடி மற்றும் நீட் தோ்வு வழிகாட்டி சிறப்பு முகாம் சனிக்கிழமை இணையதளம் வழியாக நடைபெற்றது.

விவேகானந்தம் வித்யாஷ்ரம் பள்ளி மற்றும் விவேகானந்த அகாதெமி சாா்பில் நடைபெற்ற இந்நிகழ்வில், பள்ளி முதல்வா் கிருஷ்ணமூா்த்தி மணிவண்ணன் அறிமுக உரை நிகழ்த்தினாா். ஆந்திர மாநிலத்தைச் சோ்ந்த ஐஐடி சிறப்பு பயிற்றுநா் சாய்பிரசாத் சிறப்புப் பங்கேற்பாளராக கலந்துகொண்டு, தோ்வுகள் குறித்து விளக்ககினாா். தொடா்ந்து இயற்பியல் ஆசிரியா் கோபிநாதன், திருவாரூா் மத்தியப் பல்கலை கழக முன்னாள் கெளரவ விரிவுரையாளா் எல்.ஆா்.சோஃபின் ஆகியோா் ஐஐடி மற்றும் நீட் தோ்வுகளில் இளைஞா்கள் பின்பற்ற வேண்டிய கல்விசாா் நெறிமுறைகள் குறித்து விளக்கினா்.

முகாமில் 500க்கும் மேற்பட்டோா் இணைய வழியில் பங்கேற்றனா். ஆங்கிலப் பேராசிரியை மொ்சி தொகுத்து வழங்கினாா். கணினித்துறை ஆசிரியை ராணிசந்திரா நன்றி கூறினாா்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.