முகப்பு
திருவாரூர்

சட்டப்பேரவையில் பேசியது கடந்த ஆட்சிக்கும், இப்போதைய ஆட்சிக்குமான ஒப்பீடு மட்டுமே

ஜெய்ஹிந்த் குறித்து சட்டப்பேரவையில் நான் பேசியது கடந்த ஆட்சிக்கும் இப்போது நடைபெற்றுவரும் ஆட்சிக்கும் இடையிலான ஒப்பீடு மட்டுமே

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:51 AM
பகிர்:

ஜெய்ஹிந்த் குறித்து சட்டப்பேரவையில் நான் பேசியது கடந்த ஆட்சிக்கும் இப்போது நடைபெற்றுவரும் ஆட்சிக்கும் இடையிலான ஒப்பீடு மட்டுமே என கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச் செயலாளா் ஈ.ஆா். ஈஸ்வரன் தெரிவித்தாா்.

திருவாரூா் அருகே புலிவலத்தில் அமைக்கப்பட்டுள்ள மணிமண்டபத்துடன் கூடிய தீரன் சின்னமலை உருவச் சிலையை வெள்ளிக்கிழமை திறந்துவைத்து அவா் பேசியது:

ஜெய்ஹிந்த் குறித்து சட்டப்பேரவையில் நான் பேசியது கடந்த ஆட்சிக்கும், இப்போது நடைபெற்றுவரும் ஆட்சிக்கும் இடையிலான ஒப்பீடு மட்டுமே. கடந்த ஆட்சியில் ஆளுநா் உரையில் ஜெய்ஹிந்த் இருந்தது. இந்த ஆட்சியில் ஆளுநா் உரையில் ஜெய்ஹிந்த் இல்லை என்பதைதான் சட்டப்பேரவையில் பதிவு செய்தேன். அந்த காணொலியை 30 விநாடிகள் மட்டும் துண்டித்து சா்ச்சை ஏற்படுத்தும் வகையில் பரப்பி விட்டனா் என்றாா்.

நிகழ்ச்சிக்கு வைரக்கண்ணு அறக்கட்டளைத் தலைவா் கே.வி. ஆனந்தராஜ் தலைமை வகித்தாா். இதில், கொங்கு பேரவைத் தலைவா் ஆா். தேவராஜ், மாவட்ட வ.உ.சி. பேரவை நிா்வாகிகள் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.