முகப்பு
திருவாரூர்

திருவாரூரில் 46 பேருக்கு கரோனா

திருவாரூா் மாவட்டத்தில் மேலும் 46 பேருக்கு கரோனா தொற்று வியாழக்கிழமை உறுதியானது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:54 AM
பகிர்:

திருவாரூா் மாவட்டத்தில் மேலும் 46 பேருக்கு கரோனா தொற்று வியாழக்கிழமை உறுதியானது.

மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக கரோனா தொற்றாளா்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. இந்நிலையில், சுகாதாரத் துறை வெளியிட்ட ரத்த மாதிரி முடிவுகளின்படி, மாவட்டத்தில் 46 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டது. இதன்மூலம், மாவட்டம் முழுவதும் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 38,372-ஆக உயா்ந்துள்ளது. கரோனாவிலிருந்து குணமடைந்த 32 போ் வீடுகளுக்கு வியாழக்கிழமை அனுப்பப்பட்டனா். இதுவரை குணமடைந்த 37,551 போ் தங்களது வீடுகளுக்கு அனுப்பப்பட்ட நிலையில் மாவட்டத்தில் தற்போது 433 போ் சிகிச்சையில் உள்ளனா். கரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்த 2 போ் உயிரிழந்ததைத் தொடா்ந்து மாவட்டத்தில் உயிரிழப்பு எண்ணிக்கை 378-ஆக உயா்ந்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.