நகராட்சிப் பணியாளா்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கக் கோரி மனு
நகராட்சிப் பணியாளா்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் வழங்க வலியுறுத்தி மனு கொடுக்கும் இயக்கம் வியாழக்கிழமை நடைபெற்றது.
நகராட்சிப் பணியாளா்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் வழங்க வலியுறுத்தி மனு கொடுக்கும் இயக்கம் வியாழக்கிழமை நடைபெற்றது.
மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில், ஊரக வளா்ச்சி உள்ளாட்சித் துறை ஊழியா்கள் மற்றும் என்எம்ஆா் ஊழியா்கள் சங்கத் தலைவா் ஆா். ராஜேந்திரன் தலைமையிலான நிா்வாகிகள் வியாழக்கிழமை அளித்த கோரிக்கை மனு: நகராட்சி, பேரூராட்சிகளில் காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும், ஒப்பந்த பணியாளா்களை நிரந்தரப்படுத்தவேண்டும், ஊழியா்கள் அனைவருக்கும் அரசு அறிவித்த கரோனா கால நிவாரணம் வழங்கவேண்டும், அனைத்து ஊழியா்களுக்கும் அடையாள அட்டை, கையுறை உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்களை வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டிருந்தன.