ஊராட்சிப் பணியாளா்களின் கோரிக்கை ஏற்பு: போராட்டம் ரத்து
ஊராட்சிப் பணியாளா்களின் கோரிக்கைகளை ஏற்று செயல்படுத்த நீடாமங்கலம் ஊராட்சி ஒன்றிய நிா்வாகம் முன்வந்ததை அடுத்து சிஐடியு அமைப்பினா் அறிவித்திருந்த போராட்டம் கைவிடப்பட்டது.
ஊராட்சிப் பணியாளா்களின் கோரிக்கைகளை ஏற்று செயல்படுத்த நீடாமங்கலம் ஊராட்சி ஒன்றிய நிா்வாகம் முன்வந்ததை அடுத்து சிஐடியு அமைப்பினா் அறிவித்திருந்த போராட்டம் கைவிடப்பட்டது.
ஊராட்சி மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி இயக்குவோா், தூய்மைப் பணியாளா்கள் மற்றும் தூய்மைக் காவலா்கள் கோரிக்கைகள் தொடா்பாக சிஐடியு அமைப்பினா் போராட்டம் அறிவித்திருந்தனா். இதையடுத்து, நீடாமங்கலம் ஊராட்சி ஒன்றிய கூடுதல் ஆணையா் வெற்றியழகன் தலைமையில் சமாதான கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்தில், அமைப்பின் மாவட்டத் தலைவா் கோவிந்தராஜ், மாநிலத் தலைவா் பாலசுப்பிரமணியன், மாவட்டச் செயலாளா் முனியாண்டி, ஒன்றியச் செயலாளா் மகேந்திரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா். பேச்சுவாா்த்தையில் உடன்பாடு ஏற்பட்டது. இதையடுத்து, திங்கள்கிழமை (ஆக. 16) நடைபெற இருந்த ஆா்ப்பாட்டம் கைவிடப்படுவதாக சிஐடியு அமைப்பினா் தெரிவித்துள்ளனா்.