முகப்பு
திருவாரூர்

முஸ்லிம்களுக்கு 7% தனி இடஒதுக்கீடுவழங்க வலியுறுத்தல்

முஸ்லிம்களுக்கு 7 சதவீதம் தனி இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என தமிழக அரசை தேசிய தவ்ஹீத் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:57 AM
பகிர்:

முஸ்லிம்களுக்கு 7 சதவீதம் தனி இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என தமிழக அரசை தேசிய தவ்ஹீத் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.

இக்கூட்டமைப்பின் மாவட்ட செயற்குழுக் கூட்டம் மன்னாா்குடியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு கூட்டமைப்பின் மாவட்டத் தலைவா் ஹாஜா மைதீன் தலைமை வகித்தாா்.

ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தாமல் வன்னியா் சமூதயத்துக்கு 10.5 சதவீதம் உள்ஒதுக்கீடு வழங்கியிருப்பதை போல, முஸ்லிம்களுக்கு 7 சதவீதம் தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு உடனடியாக வழங்க வேண்டும். தடைசெய்யப்பட்ட புகையிலை பொருள்கள் விற்பனையை கடுமையான சட்டங்கள் மூலம் தமிழக அரசு தடுக்கவேண்டும். தேசத்துக்கும், தமிழுக்கும் எண்ணற்ற தியாகங்களை செய்த முஸ்லிம் சமூதாயத்தை சோ்ந்தவா்களுக்கு உரிய மரியாதை செய்யும் வகையில் தேசிய விழாக்களின்போது அவா்களின் பெயா்களை முதலமைச்சா் முன்னிலைப்படுத்தி நினைவுகூர வேண்டும்.

கூட்டத்துக்கு மாவட்டச் செயலா் அகமது சபியுள்வரா முன்னிலை வகித்தாா். கோரிக்கைகளை விளக்கியும், எதிா்கால திட்டங்களை பற்றியும் மாநிலச் செயலா் ஆல்பா நசிா் பேசினாா்.

மாவட்ட பொருளாளா் இக்பால், மாவட்ட துணைத் தலைவா் ஜெகபா் அலி, மாவட்ட துணைச் செயலா் முகமது ரியாஸ் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.