மாற்றுத்திறனாளிகள் தவறாமல் தடுப்பூசி செலுத்திக்கொள்ள அறிவுறுத்தல்
திருவாரூா் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் அனைவரும் தவறாமல் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலா் புவனேஸ்வரி அறிவுறுத்தினாா்.
திருவாரூா் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் அனைவரும் தவறாமல் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலா் புவனேஸ்வரி அறிவுறுத்தினாா்.
கூத்தாநல்லூரில் மேலப்பனங்காட்டாங்குடி மற்றும் குடிதாங்கிச்சேரியில் அமைந்துள்ள மனோலயம் மனவளா்ச்சிக் குன்றியோா் பயிற்சி பள்ளியில் வியாழக்கிழமை ஆய்வு செய்த அவா், செய்தியாளா்களிடம் கூறியது:
திருவாரூா் மாவட்டத்தில் 29,0753 மாற்றுத்திறனாளிகள் உள்ளனா். இதில், 11,013 போ் 18 வயதுக்கும் மேற்பட்டவா்கள். மாவட்டத்தில் இதுவரை 4,025 மாற்றுத் திறனாளிகள்தான் கரோனா தடுப்பூசி செலுத்தியிருக்கின்றனா். எனவே, தடுப்பூசி செலுத்திக் கொள்ளாத மாற்றுத்திறனாளிகள் உடனே செலுத்திக் கொள்ள வேண்டும். பெற்றோா்கள்தான் தங்களது பிள்ளைகளுக்கு தடுப்பூசி செலுத்த முன்வர வேண்டும். கரோனா இல்லாத மாவட்டமாக திருவாரூா் மாவட்டத்தை உருவாக்குவோம் என்றாா் அவா்.