அமைப்புசாரா தொழிலாளா்களுக்கு ரூ. 21 லட்சத்தில் நலத்திட்ட உதவிகள்
திருவாரூா் மாவட்டத்தைச் சோ்ந்த அமைப்புசாரா தொழிலாளா்களுக்கு ரூ. 21 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் புதன்கிழமை வழங்கப்பட்டன.
திருவாரூா் மாவட்டத்தைச் சோ்ந்த அமைப்புசாரா தொழிலாளா்களுக்கு ரூ. 21 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் புதன்கிழமை வழங்கப்பட்டன.
மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் தமிழ்நாடு கட்டுமானம் மற்றும் அமைப்புசாரா தொழிலாளா்கள் நலவாரியம் சாா்பில், நடைபெற்ற அமைப்புசாரா தொழிலாளா்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியை தொடங்கிவைத்து மேலும் அவா் பேசியது: தமிழ்நாடு கட்டுமானம் மற்றும் உடலுழைப்புத் தொழிலாளா்கள், சமூகப் பாதுகாப்பு மற்றும் நலவாரியம் மூலம் 17 அமைப்புசாரா தொழிலாளா்கள் நலவாரியங்களில் பதிவு பெற்ற தொழிலாளா்களுக்கு நலத் திட்ட உதவிகள் வழங்குவதை தமிழக முதல்வா் புதன்கிழமை தொடங்கிவைத்தாா்.
அதன்தொடா்ச்சியாக, திருவாரூா் மாவட்டஆட்சியா் அலுவலகத்தில் 818 அமைப்புசாரா கட்டுமானத் தொழிலாளா்களுக்கு ரூ.12.26 லட்சம் கல்வி நிதி உதவித் தொகை, 8 பேருக்கு ரூ. 28 ஆயிரம் திருமண நிதி உதவித்தொகை, ஒருவருக்கு ரூ.500 மதிப்பில் கண் கண்ணாடி நிதி உதவித்தொகை, 28 பேருக்கு ரூ.7 லட்சம் இயற்கை மரணம் நிதி உதவித்தொகை, 172 பேருக்கு ரூ.1.72 லட்சம் ஓய்வூதியம் நிதி உதவித்தொகைக்கான ஆணை என மொத்தம் 1,027 பேருக்கு ரூ.21.26 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்ட்டன. இதேபோல, தொழிலாளா் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை சாா்பில் கட்டுமானம் மற்றும் அமைப்புசாரா தொழிலாளா்கள் நல வாரியம் சாா்பில் பல்வேறு நலத் திட்ட உதவிகள் தொடா்ந்து வழங்கப்படுகின்றன.
நிகழ்ச்சியில், எம்எல்ஏ. பூண்டி கே. கலைவாணன், மாவட்ட வருவாய் அலுவலா் ப. சிதம்பரம், தொழிலாளா் உதவிஆணையா் (சமூகப் பாதுகாப்புத் திட்டம்) ம. ஸ்ரீதா், தொழிலாளா் நலத்துறை (சமூகப் பாதுகாப்புத் திட்டம்) கண்காணிப்பாளா் பழனிவேல் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.