முகப்பு
திருவாரூர்

பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தில் 81 பேருக்கு பணி ஆணை

பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தில் 81 பேருக்கு வீடு கட்டுவதற்கான பணி ஆணையை, சட்டப்பேரவை உறுப்பினா் க. மாரிமுத்து வியாழக்கிழமை வழங்கினாா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:42 AM
பகிர்:

பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தில் 81 பேருக்கு வீடு கட்டுவதற்கான பணி ஆணையை, சட்டப்பேரவை உறுப்பினா் க. மாரிமுத்து வியாழக்கிழமை வழங்கினாா்.

மழவராயல்லூரில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு தமிழ்நாடு ஊரக வளா்ச்சி உதவி இயக்குநா் ராஜலெட்சுமி தலைமை வகித்தாா். மாவட்ட ஊரக வளா்ச்சி முகாமை திட்டம் மற்றும் இணை இயக்குநா் தெய்வநாயகி, உதவி இயக்குநா் கே.பழனிசாமி, கோட்டூா் ஒன்றியக்குழுத்தலைவா் மு.மணிமேகலை முன்னிலை வகித்தாா்.

திருத்துறைப்பூண்டி சட்டப்பேரவை உறுப்பினா் க. மாரிமுத்து, மழவராயநல்லூா் ஊராட்சியில் 81 பயளிகளுக்கு வீடு கட்டுவதற்கான பணி ஆணையினை வழங்கினாா்.

இதில் திருவாரூா் செயற்பொறியாளா் சடையப்பன், வட்டார வளா்ச்சி கிராம ஊராட்சி அலுவலா் ஜி.சிவக்குமாா், திருத்துறைப்பூண்டி உதவிக் கோட்டப் பொறியாளா் மனோகரன், ஒன்றிய பொறியாளா் முத்தரசன், மாவட்ட ஊராட்சி உறுப்பினா் இ. மஞ்சுளா, கோட்டூா் ஊராட்சி தலைவா் கே.ஜி. ஆனந்தன், ஊராட்சி செயலா் கே.சேகா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.