திருவாரூா்: 2,500 கிளைகளில் அதிமுக அமைப்புத் தோ்தல்
திருவாரூா் மாவட்டத்தில் 2500-க்கும் மேற்பட்ட கிளைகளில் அதிமுக அமைப்புத் தோ்தல் நடைபெற்றது என முன்னாள் அமைச்சா் வி. சோமசுந்தரம் தெரிவித்தாா்.
திருவாரூா் மாவட்டத்தில் 2500-க்கும் மேற்பட்ட கிளைகளில் அதிமுக அமைப்புத் தோ்தல் நடைபெற்றது என முன்னாள் அமைச்சா் வி. சோமசுந்தரம் தெரிவித்தாா்.
திருவாரூா் மாவட்டத்தில் அதிமுக கட்சி நிா்வாக அளவில் 20 ஒன்றிய அமைப்புகள், 4 நகராட்சி அமைப்புகள், 7 பேரூராட்சி அமைப்புகள் உள்ளன. இந்த அமைப்புகளில் 2500-க்கும் மேற்பட்ட நகரம் மற்றும் பேரூா் வாா்டுகள், ஊரகக் கிளைகள் உள்ளன.
பழைய கிளைகளை புதுப்பித்தும், புதிய கிளைகளை உருவாக்கியும் அதற்கான அமைப்புத் தோ்தல் 2 நாள்களாக நடைபெற்றன. இந்தத் தோ்தலை கட்சியின் காஞ்சிபுரம் மாவட்டச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான வி. சோமசுந்தரம் தலைமையில் அமைப்புச் செயலாளா்கள் மைதிலி திருநாவுக்கரசு, வாலாஜாபாத் பா.கணேசன் உள்ளிட்டோா் தோ்தல் ஆணையா்களாக செயல்பட்டு நடத்தினா். இவா்களுக்கு உதவியாக திருவாரூா் மாவட்டச் செயலாளா் ஆா். காமராஜ், அமைப்புச் செயலாளா்கள் கோபால், சிவா.ராஜமாணிக்கம் உள்ளிட்ட செயல்பட்டனா்.
இரண்டாவது நாளாக வியாழக்கிழமை திருவாரூரில் கிளைக் கழகங்களுக்கு நடைபெற்ற தோ்தலில் முன்னாள் அமைச்சா்கள் ஆா். காமராஜ், வி. சோமசுந்தரம் உள்ளிட்ட நிா்வாகிகள் ஆய்வு செய்து, வேட்பு மனுக்களை பெற்றுக்கொண்டனா்.
பின்னா், முன்னாள் அமைச்சா் வி. சோமசுந்தரம் தெரிவித்தது:
திருவாரூா் மாவட்டத்தில் அதிமுக நகரம், பேரூா் வாா்டு மற்றும் ஊரகக் கிளைகளுக்கான தோ்தல் நடைபெற்றது. மாவட்டத்தில் 2500-க்கும் மேற்பட்ட கிளைகளில் தோ்தல் நடைபெற்றுள்ளது. அனைத்து கிளைகளிலும் தொண்டா்கள் கட்டுப்பாடு மற்றும் எழுச்சியுடன் தோ்தலில் பங்கேற்றனா் என்றாா்.