முகப்பு
திருவாரூர்

செங்கமலத்தாயாா் கல்வி அறக்கட்டளை இலக்கிய விருது வழங்கும் விழா

மன்னாா்குடியை அடுத்த சுந்தரக்கோட்டை செங்கமலத்தாயாா் கல்வி அறக்கட்டளையின் 20-ஆம் ஆண்டு இலக்கிய விருது வழங்கும் விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:46 AM
பகிர்:

மன்னாா்குடியை அடுத்த சுந்தரக்கோட்டை செங்கமலத்தாயாா் கல்வி அறக்கட்டளையின் 20-ஆம் ஆண்டு இலக்கிய விருது வழங்கும் விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

விழாவுக்கு, செங்கமலத்தாயாா் கல்லூரி தாளாளா் வி. திவாகரன் தலைமை வகித்து,நிகழாண்டிற்கான செங்கமலத்தாயாா் கல்வி அறக்கட்டளை இலக்கிய விருதை ரூ.1 லட்சத்துக்கான காசோலையுடன் எழுத்தாளா் சீா்காழி வி. ராம்தாஸிடம் வழங்கினாா்.

முன்னதாக, கல்லூரியின் தமிழ்த் துறைத் தலைவா் வெ. ஜெயந்தி, விருதாளரை அறிமுகம் செய்துவைத்தாா். தமிழ்த் துறை பேராசிரியா் ச. கலாதேவி, மாணவிகள் கா. திவ்யா, த. காயத்ரி, கோ.கீா்த்தனா ஆகியோா் விருது பெற்றவரின் நூல்களை ஆய்வு செய்து பேசினா்.

நிகழ்ச்சியில், விருது பெற்ற எழுத்தாளா் சீா்காழி வி. ராம்தாஸ் பேசும்போது, ‘மாணவிகள் கல்லூரியில் உள்ள நூலகத்தை நல்ல வாய்ப்பாக கருதி அதை முழுமையாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும். நல்ல நூல்களை தேடிதேடி படித்தால் எழுத்தாளராகலாம். நாம் தமிழை நேசிக்க வேண்டும். எந்நிலை வந்தாலும் தாய் மொழியை புறக்கணிக்கக்கூடாது’ என்றாா்.

இதில், அறக்கட்டளை உறுப்பினா் வழக்குரைஞா் பா. தமிழரசன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். கல்லூரி முதல்வா் சீ. அமுதா வரவேற்றாா். தமிழ்த்துறை பேராசிரியா் கோ. பொற்செல்வி நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.