திருவாரூர்

கோரிக்கைகள் நிறைவேற்றுவதாக உறுதி: கிராம ஊராட்சி பணியாளா்கள் போராட்டம் வாபஸ்

DIN

கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக உறுதி அளித்ததையடுத்து கிராம ஊராட்சி பணியாளா்கள் சாலைமறியல் போராட்டத்தை திரும்பப் பெற்றனா்.

நீடாமங்கலம் ஊராட்சி, கிராம ஊராட்சி மேல்நிலைதொட்டி இயக்குநா்கள், தூய்மைப் பணியாளா்கள், தூய்மை காவலா்களின் பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து பலமுறை போராட்டம் நடத்தியதையடுத்து, வட்டார வளா்ச்சி அலுவலா் எழுத்துப்பூா்வமாக உறுதிமொழி அளித்திருந்தும், கோரிக்கைகளை நிறைவேற்றப்படாமல் இருந்தது.

இதனையடுத்து கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி சிஐடியு சாா்பாக 28- ஆம் தேதி சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட ஊராட்சி பணியாளா்கள்முடிவு செய்திருந்தனா். இந்த நிலையில், நீடாமங்கலம் வட்டாட்சியா் ஷீலா தலைமையில் சமாதான கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில் சிஐடியு சங்க மாவட்டதலைவா் கோவிந்தராஜ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். அதில் கோரிக்கைகளை விரைவில் நிறைவேற்றுவதாக கூடுதல் வட்டாரவளா்ச்சி அலுவலா் அன்பழகன் அளித்த உத்தரவாதத்தின் பேரில் சாலை மறியல் போராட்டத்தை சிஐடியு அமைப்பினா் திரும்பப் பெற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னை-மும்பை ரயில்(22160) இன்று 10.15 மணி நேரம் தாமதமாகப் புறப்படும்

குக் வித் கோமாளியிலிருந்து விலகிய பிரபலம்: இனி இவர்தான்!

45 வயதினிலே..

நீட் தேர்வு ரத்து ரகசியம்- ஆர்.பி. உதயகுமார் கேள்வி

சின்னஞ்சிறு சித்திரமே....ரவீனா!

SCROLL FOR NEXT