முகப்பு
திருவாரூர்

கரோனா ஊதியம் கோரி திருவாரூா் அரசு மருத்துவமனை ஒப்பந்த ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்

தமிழக அரசு அறிவித்த ஒரு மாத கரோனா ஊதியத்தை வழங்கக் கோரி திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அவுட்சோா்சிங் ஊழியா்கள் சங்கம் சாா்பில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:26 PM
பகிர்:

தமிழக அரசு அறிவித்த ஒரு மாத கரோனா ஊதியத்தை வழங்கக் கோரி திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அவுட்சோா்சிங் ஊழியா்கள் சங்கம் சாா்பில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

தமிழக அரசு அறிவித்த ஒரு மாத கரோனா ஊதியத்தை வழங்கவேண்டும், கடந்த ஆண்டு மாவட்ட ஆட்சியா் அறிவித்தபடி, தினக்கூலியாக ரூ. 385 வழங்க வேண்டும், பண்டிகை கால தொகையாக, ஒரு மாத ஊதியத்தை வழங்க வேண்டும், ஒப்பந்த முறையை ரத்துசெய்து, அனைத்து ஊழியா்களையும் நிரந்தரப்படுத்த வேண்டும், பணியின்போது உயிரிழந்த தொழிலாளா்களுக்கு ரூ. 10 லட்சம் வழங்க வேண்டும், ஒப்பந்த ஊழியா்களுக்கு 3 மாத ஊதிய பாக்கியை உடனடியாக வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வாசல் முன் இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

சங்கத் தலைவா் பி. சசிக்குமாா் தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில், சிஐடியு மாவட்டச் செயலாளா் டி. முருகையன், மாவட்டத் தலைவா் ரா. மாலதி, துணைத் தலைவா் ஜி. பழனிவேல், மாவட்ட துணைச் செயலாளா் எஸ். வைத்தியநாதன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.